குளுகுளுவென மாறியது கொடிக்கால்பாளையம் -காலை முதல் விட்டு விட்டு மழை...
Posted by Kodikkalpalayam
on Wednesday, February 13, 2013
0
கொடிக்கால்பாளையம் : வெப்பச் சலனம் காரணமாக இன்று 14-02-2013 திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நகரே குளுமையாக மாறிப் போயுள்ளது. நமதூரில் இன்று காலையில் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது. சில இடங்களில் இது வலுத்தும், சில பகுதிகளில் லேசான தூறலாகவும் இருந்தது. காலை பெய்யத் தொடங்கிய இந்த மழை விட்டு விட்டுபெய்து கொண்டிருக்கிறது. வெப்பச் சலனம் காரணமாக இந்த மழை பெய்வதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. காலையிலேயே மழை பெய்ய ஆரம்பித்ததால் பள்ளிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர். இருப்பினும் மழையால் வெப்பம் குறைந்து குளுகுளுவென மாறியுள்ளதால் நமதூர் மக்கள் குஷியாகியுள்ளனர்.
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்