நபிவழி தொழுகைக்கு ஒத்துக்கொண்டு நபிவழியை பேனிய மேலத்தெரு சுன்னத் ஜமாஅத்

Posted by Kodikkalpalayam on Wednesday, July 31, 2013 0

                                         ஏக  இறைவனின் திருப்பெயரால்...
                     
கொடிக்கால்பாளையம்:திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு பகுதியில் வசிப்பவர் (ஹாஜப்பா) என்கின்ற ஹாஜா முஹைதீன் அவருடைய தாயார் ரஹ்மத் நிஷா அவர்கள் கடந்த  29-07-2013 அன்று வபாத்தாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
                  
                                                      ஊரில் ஓர் தவ்ஹீத் புரட்சி!!! 
தவ்ஹீத் கொள்கையின் எழுச்சி நாளுக்கு நாள் அதிகமாக அதிகமாக ஊருக்குள் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு தவ்ஹீத் சகோதரர்களா உருவெடுத்து விட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் அதுபோன்று உருவெடுத்த குடும்பத்தில் இதுவும் ஒன்று,
                 
                                 
                              தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்!!!
ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க முடியாது. 'எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 1079, 1078
                      
                                   அனுமதி அளித்த சுன்னத் ஜமாஅத்!!!
ஜனாஸா நல்லடக்கத்தை நபிவழி அடிப்படையில் நடத்த வேண்டும் என்று அவருடைய மகன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் மேலத்தெரு சுன்னத் ஜமாஅத் யிடம் மறுநாள் 30/07/2013 காலையில் கேட்டுகொண்டனர் அதன் அடிப்படியில் மேலத்தெரு ஜமாத்தார்கள் ஆலோசனைக்கு பின் அவருடைய வீட்டு உள்ளே தொழுகைநடத்தி கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ் வீட்டில் உள்ளே நபிவழி ஜனாஸா தொழுகை இறைவன் அருளால் ஜனாஸா தொழுகை வீட்டில் உள்ளே அவருடைய மகன் தொழுகை வைக்க நபிவழி அடிப்படியில் நடைபெற்றது
                       
                                    இரண்டாம் தொழுகை நடத்தும் அவலம்!!!
ஜனாஸா தொழுகைக்கு அனுமதி அழித்த சுன்னத் ஜமாத்தினர் நாங்களும் ஜனாசாவிர்க்கு இரண்டாம் தொழுகை நடத்துவோம் என்று நடத்தி காட்டியதையும் காண முடிந்தது

 எது ஏப்படியோ இப்போதாவது தவ்ஹீதை நடைமுறை படுத்த  
ஒத்துகொண்ட ஜமாத்தார்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக மேலத்தெரு ஜமாத்தையும் முழுக்க முழுக்க உண்மையான   சுன்னத்தை பேணக்கூடிய ஜமாத்தாக அல்லாஹ் காப்பானாக...

உண்மையை  உரக்க  ஊருக்கு  சொல்லும்  பனி  தொடரும்  இன்ஷா அல்லாஹ் ...

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top