வட மறைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?

Posted by Kodikkalpalayam on Sunday, June 5, 2011 0


1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்

2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.

4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன் முன்னனி பேச்சாளர்களும் கூண்டோடு விலகியதையடுத்து தமுமுக அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தடை செய்ய அதிகாரமிருந்தும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதை செய்யவில்லை

5. எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லாமல் முஸ்லிம் ட்ரஸ்ட் கட்டடத்தின் முதல்மாடியில் இயங்கிவந்த தமுமுகவினர், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலக ஊழியர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்தி ரவுடித்தனம் செய்ததால் காவல்துறை மூலம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

6. RDO விசாரணையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முதல் மாடியை தமுமுக வும், இரண்டாம் மாடியை உணர்வு இதழும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரும் யாருக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


7. RDO உத்தரவிட்ட 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை உணர்வு வார இதழின் நிர்வாகப்பிரிவு அலுவலகம் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

8. 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் துறை மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டவை ஆதாரங்களாக நம்மிடம் உள்ளன.

9. கடந்த 2011 மே 27ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும், மற்றும் உணர்வு இதழின் பொறுப்பாளர்களும் ஊட்டி சென்றுவிட்டனர்.

10. இதைத் தெரிந்து கொண்ட மமகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டவர்கள் அத்துமீறி உணர்வு வார இதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 5லட்சம் பெருமானமுள்ள பொருட்களைத் திருடிச்சென்றதுடன் மறுபூட்டுப் போட்டு உணர்வு வார இதழ் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

11. செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்து 31.05.2011 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை திரும்பிய உணர்வு வார இதழின் பொறுப்பாளர்கள் தமது நிர்வாக அலுவலகம் சென்ற போது ரவுடிக்கும்பலோடு காத்திருந்த மமகவினர் உள்ளே செல்லவிடாமல் தடுத்து விரட்டியடித்து விட்டனர்.

12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.

13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.

15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.

16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது.

17. யாரும் பயப்பட வேண்டாம்; எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று பதவியேற்ற முதல்நாள் ஜெயலலிதா சொன்னது வழக்கமான அரசியல் பாம்மாத்து அறிவிப்பு தான் என்பது இதன் மூலமாக நிரூபணமாகின்றது.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top