பூங்காவா அல்லது (சமூக விரோதிகளின் கூடாரமா)நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்!!!
Posted by Kodikkalpalayam
on Saturday, November 24, 2012
0
கொடிக்கால்பாளையம்:
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் 7வது வார்டில் காயிதே மில்லத் சிறுவர் பூங்கா மேலத்தேருவில் இருப்பதை நாம் அறிந்து இருக்கின்றோம். கொடிநகர் மேலத்தெரு பூங்கா ஒரு காலத்தில் இளைய மாணவர்கள் விளையாடும் மைதானமாக இருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது பூங்காவாக மாற்றபட்டது. சிறு மாணவர் மாணவிகள் துள்ளி குதித்து விளையாடும் பூங்கா தற்போது புதர் மண்டி கிடக்கும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது...

மாணவர்கள் ஆசை ஆசையாக விளையாடும் அணைத்து தொட்டிகளும் உயிரை எடுக்கும் தொட்டியாக மாறி விட்டது...

உடற்பயிற்சி கூடம் நொண்டி குதிரையாக மாறிய கதை...
பூங்கா புனர் நிர்ணயம் செய்யும் போது நமதூர் இளைய மாணவர்கள் உடற் பயிற்சிக்காக உடற்பயிற்சி கூடம் ஆரம்பம் ஆனது இப்போது உடைந்த இடமாக இருக்கிறது...
.
புதர் காடு
நமது ஊர் பழங்காலத்து பெரியவர்கள் சொல்வார்கள் இந்த பூங்கா ஒரு காலத்தில் அருமையான பூக்களால் அலங்கரிக்க பட்டு பல வகையான பூக்கள் பூக்கும் இடமாக இருந்தது...இப்போது புதர் மண்டி கிடக்கும் கருவக்காடாக உள்ளது...


காணாமல் போன ஆரம்பபள்ளி கூடம் குழந்தைகள் மையம்,,,
சிறு பிள்ளைகளுக்காக ஆரம்பிக்க பட்ட ஆரம்பபள்ளி கூடம், இப்போது கேட்பாரற்று கிடப்பதை பார்க்க முடிகிறது.
சமூக விரோதிகளின் கூடாரம்...
கவனிக்க படாமல் இருக்கும் இந்த பூங்கா இரவு நேரங்களில் போதை பொருட்கள் மற்றும் சாராயம் குடிக்கும் மற்றும் விற்கும் இடமாக மாறி விட்டது..
இதை நகராட்சி ஆணையர்,நகரமன்ற தலைவர்,மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
விரைந்து சரி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
செய்தி தொகுப்பு மாணவர்அணி...
மேலும் புகைப்படம் ....



Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்