கொடிக்கால்பாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகாலையில் வெளியேற அச்சம்
Posted by Kodikkalpalayam
on Wednesday, January 9, 2013
1
கொடிக்கால்பாளையம் : கொடிக்கால்பாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொடிக்கால்பாளையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில், நாளுக்குநாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள், தெருக்களில் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். குறிப்பாக, அதிகாலையில் வெளியேறும் பொதுமக்களையும், இரவு நேரத்தில் திரும்புவோரையும், தெரு நாய்கள் துரத்துகின்றன.இது குறித்து, நமதூர் மேலத்தேருவை
சேர்ந்த S.நாசர்
கூறுகையில், "மேலத்தெரு, தெற்குத்தெரு, பள்ளிவாசல் தெரு, ஜெயம் தெரு தெற்குதெருக்களில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. விடிற்காலையில் தொழுகைக்கு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டால் நாய்கள் துரத்துகின்றன என்பதால், விடிந்த பின்னரே வீட்டைவிட்டு வெளியேற வேண்டியுள்ளது. நகராட்சி மற்றும் வார்ட் கவுன்சிலர்கள் அதிகாரிகள் தெருக்களில் உள்ள நாய்களை அப்புறப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கேட்டுகொள்கிறோம்...
புகைப்படம் எடுத்த இடம் ஜெயம் தெரு சந்திப்பு
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDelete