தஞ்சை மற்றும் திருச்சியில் வரும் 23-ஆம் தேதி ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு பாஸ்போர்ட் முகாம்!
Posted by Kodikkalpalayam
on Thursday, February 21, 2013
0
வரும், 23ம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் கூறியிருப்பதாவது:
ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வோர் வரும், மார்ச், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால், புதிதாக பாஸ்போர்ட் எடுக்க அல்லது புதுப்பிக்கவும் அரசு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. அதன்படி ஹஜ் பயணத்துக்கான பாஸ்போர்ட், குறைந்தபட்சம், 2014ம் ஆண்டு மார்ச், 31ம் தேதி வரையில் செல்லுபடியுள்ளதாக இருப்பது அவசியம்.முன்பதிவின்றி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம். அதற்கான சிறப்பு முகாம் திருச்சி, தஞ்சை பாஸ்போர்ட் சேவை மையங்களில், ஃபிப்., 23ம் தேதி நடக்கிறது. காலை, 9 மணி முதல், 11 மணி வரை, புதிய விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
அதன்பின், விண்ணப்பங்கள் குறித்த பரிசீலனை நடக்கும். இதற்காக ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பித்த நகல் மட்டும் இருந்தால் போதுமானது. தேதி, நேரம் குறித்த முன்பதிவு அவசியமில்லை.பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான போலீஸ் சான்றுகள் சிறப்பு தகுதி அடிப்படையில், டி.எஸ்.பி., அலுவலகம் மூலம் விசாரிக்கப்பட்டு, அதன்பின், பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, ஹஜ் பயணிம் மேற்கொள்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். ஹஜ் பயணிக்கான பாஸ்போர்ட் தொடர்பான பிற குறைதீர் மனுக்கள் மீதான பரிசீலனை, வரும் ஃபிப்., 25ம் தேதி முதல், மார்ச், 20ம் தேதி வரை நடக்கிறது.
ஹஜ் செல்ல தீர்மாணித்துள்ள நமதூர் சகோதர சகோதரிகள் இதில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்...
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்