நபி வழி திருமணம் கொடிக்கால்பாளையம் (18/08/2013)
Posted by Kodikkalpalayam
on Monday, August 19, 2013
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் நபிவழித் திருமணம் தவ்ஹீத் பள்ளிவாசலில் 18/08/2013 (இன்று) காலை 11.30க்கு நடைபெற்றது. இத்திருமணம் மிகவும் எளிமையாகவும், மற்ற திருமணத்தில் நடக்கும் அலங்காரம் , வீண்விரையம் , ஊர்வலம் .. போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் நடைபெற்றது. (புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!)

இதில் சகோ: முஹம்மத் பருஜ் (TNTJ மாவட்ட தாயி) அவர்கள் நபிவழித் திருமணம் பற்றிய தெளிவான குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உரையாற்றினார்கள். பின்னர் பொதுவான இரண்டு சாட்சியங்களுடனும் மணமகன் மற்றும் மணமகள் ஒப்புதலுடனும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மணமகன் மஹராக 5 பவுன் தங்க நெக்லஸ் மணமகளுக்கு கொடுத்தார். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் மற்ற திருமணங்களில் நடக்கும் இறைதூதர் (ஸல்) காட்டி தராத துஆக்களை புறக்கணித்து ..

நபி (ஸல் ) காட்டி தந்த (பாரகல்லாஹு லக்க) துஆவை ஒவ்வொருவரும் மணமக்களுக்காக பிராத்தித்தார்கள். இறுதியாக ஒவ்வொருவரும் சபையை விட்டு கலைந்து செல்லும் துஆ ஓதியவர்களாக பள்ளிவாசலில் வழிமா விருந்து வழங்கப்பட்டு கலைந்து சென்றனர் அல்ஹம்துலில்லாஹ்!

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts