மோடி வருகை -ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்!!!
Posted by Kodikkalpalayam
on Wednesday, September 25, 2013
0
நமதூர் கொடிநகர் மற்றும் சுற்று வட்டார ஊர் மாணவர்கள் அதிகளவில் படிக்கும் கல்லூரியான திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்கு இளம் தாமரை மாநாட்டிதிற்கு மோடி வருகையால் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் விடுதியும் விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இது குறித்து நமது செய்தியாளர் முகம்மது பைசல் அவர்களிடம் கேட்டதற்கு: திருச்சியில் மோடி வருகையால் மாணவர்களுக்கு காவல்துறையால் அதிக கெடுபிடியாக இருக்கிறது.குறிப்பாக சொல்ல போனால் ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்களுக்கு.மேலும் நமதூர் கொடிநகர் மற்றும் சுற்றுவட்டார மாணவர்கள் அதிகளவில் படிக்கும் இந்த கல்லூரியில் பெரும்பான்மையான மாணவர்கள் வாடைகைக்கு வீடு எடுத்து 10 முதல் 15 வரை ஒரு குழுவாக இருந்து வருகின்றனர்.இவர்களும் இன்று ஊர்களுக்கு செல்கின்றனர். மோடி வருகையால் முஸ்லிம் மாணவர்களால் எதாவது அசம்பாவிதம் நடைபெற்று விடுமோ என்று காவல்துறை நினைக்கிறது.ஆதலால் அணைத்து மாணவர்களும் இன்று வெளியேற்ற படுகிறார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு காவல் துறை அதிகாரிகளிடம் மனுவும் கொடுக்கப்பட்டது குறிப்பிட தக்கது
திருச்சியிளுருந்து .இன் செய்தியாளர்: முஹம்மத் பைசல்
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்