மீண்டும் கொடிநகரில் பகுதியில் இன்று ஆதார் அட்டை பதிவு முகாம்!!
Posted by Kodikkalpalayam
on Tuesday, November 19, 2013
0
ஆதார் அட்டை பதிவு செய்யும் முகாம் இரண்டாம் கட்ட பணி இன்று 20/11/2013 நமதூர் பள்ளிகளில் நடைபெற உள்ளது . இது வரை எடுக்காதவர்கள் பயன் படுத்திக்கொள்ளவும்,
முகாமுக்கு வருபவர்கள் 2010-ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டை கொண்டு வரவேண்டும்.
புதிதாக குடியேறியவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் ஆகியோர் மண்டல அலுவலகங்கள் அல்லது ஆதார் அட்டை முகாம்களில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டு படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
புதிய ஒப்புகை சீட்டு பெறுபவர்களின் பயோமெட்ரிக் பதிவுகள் இரண்டாம் சுற்று முகாம்களில் மேற்கொள்ளப்படும். முகாம்களுக்கு செல்லும்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு, குடும்ப அட்டை அல்லது நகல், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் (இருப்பின்), வங்கிக் கணக்கு எண் (இருப்பின்) ஆகியவற்றை எடுத்துச் செல்லவேண்டும்.
மேலும் விவரங்களுக்குமண்டல அலுவலகத்தை 94451 90213 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
நன்றி கொடிநகர் டைம்ஸ்
நன்றி கொடிநகர் டைம்ஸ்
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்