அமீரக மாதாந்திர அமர்வு - டிசம்பர் 2013..!!
Posted by Kodikkalpalayam
on Saturday, December 21, 2013
0
அல்லாஹ்வின் அருளால் கொடிக்கால்பாளையம் ஊர் கூட்டமைப்பின் வழமையான மாதாந்திர அமர்வின் டிசம்பர் மாத அமர்வு துபாய் மண்டல தலைமை மர்கசில் 20/12/2013 அன்று துபாய் JT மர்கசில் அசர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது...
கொள்கை சகோ வருகைக்கு மத்தியில் துவக்கமாக சகோ கொடிநகர் ஹாசிக்கின் அவர்கள் இஸ்லாம் கூறும் இளமை பருவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
அடுத்து தாயகத்தில் நடந்த நிகழ்வுகள், மார்க்கப்பணிகள், சமுதாய பணிகள் அனைத்தும் பட்டியலிட்டுக் கூறப்பட்டன. இன்ஷா அல்லாஹ் ஜனவரி-28 திருச்சியில் நடைபெறயுள்ள சிறை செல்லும் போராட்டத்திற்க்கு நமதூரில் இருந்தும், நமது மாவட்டத்தின் பிற கிளைகள் மற்றும் ஊர்களில் இருந்தும் பெருவாரியாக சகோதர,சகோதரிகளை எவ்வாறு கலந்துக்கொள்ள செய்வது என்பதைப்பற்றியும் அதற்காக தற்போது தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயல்பாடுகள் மற்றும் களப்பணிகள் குறித்தும் சகோதரர் விளக்கினார்.
தொடர்ந்து தாவா பணிகளுக்கும், தெருமுனைக்கூட்டங்களுக்கும் எப்படியெல்லாம் வலுவான நிலையை ஏற்படுத்துவது என்பதும் ஜமாஅத்தின் காரியங்களை முன்னெடுத்துச் செல்லும் வழிகளைப் பற்றியும் சகோதரர்கள் ஆர்வத்துடன் ஆலோசனை கூறினர். சந்தா, பள்ளி வளர்ச்சிநிதி பற்றியும் சகோதரர்களிடத்தில் எடுத்துக்கூற அவர்களே சிறந்த ஆலோசனைகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுடைய மார்க்கம் மேலோங்க வேண்டுமென்ற நன்நோக்கில் ஒன்று கூடிய சகோதரர்களின் இவ்வமர்வு இறையருளால் அந்த நன்நோக்கம் வெளிப்படும் விதத்தில் நிறைவு பெற்றது.
Tagged as: செய்தி, துபாய் மண்டலம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்