பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய புதிய கட்டுப்பாடு..!
Posted by Kodikkalpalayam
on Monday, December 19, 2016
0
பழைய 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு மத்திய அரசு புதிய
கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும்
1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அவற்றிற்கு
பதிலாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு
வெளியிட்டது. மேலும் வரும் 30-ம் தேதி வரை மக்கள் பழைய 500 மற்றும் 1000
ரூபாய் நோட்டுக்களை தங்கள் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து புதிய
நோட்டுக்களாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்தது.
தற்போது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு
புதிய கட்டுப்பாடு ஒன்றை மத்திய அரசு இன்று விதித்துள்ளது. அதன்படி வரும்
30-ம் தேதி வரை 5000 ரூபாய்க்கு மேல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுக்களை ஒரு வங்கி கணக்கில் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
5000 ரூபாய்க்கு குறைவாக டெபாசிட் செய்ய எந்த கட்டுப்பாடும்
விதிக்கப்படவில்லை. மேலும் கருப்பு பணம் வெள்ளையாக மற்றப்படுவதை தடுக்கவே
இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், அப்பணத்தைப் பற்றி தெரிவிக்கும் திட்டமான ‘பிரதான் மந்திரி கரிஃப் கல்யாண் யோஜனா’வின் படி டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்