தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய நபிவழி மழைத் தொழுகை
Posted by Kodikkalpalayam
on Monday, January 9, 2017
0
மழைத் தொழுகை:
-----------------------------
மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்
அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாத் TNTJ கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 08/01/2017 காலை 8.00 மணிக்கு மழைத் தொழுகை சிறப்பாக நடைபெற்று முடிந்தது
என்ன தான் மனிதன் ஆகாயத்தை முட்டுகின்ற அறிவியல் வளர்ச்சி கண்டிருந்தாலும், விண்ணைத் தொடுகின்ற வியக்கத்தக்க விஞ்ஞானப் புரட்சி படைத்தாலும் வானிலிருந்து ஒரு சொட்டு மழையை அவனால் இறக்க முடியாது.
இதோ அல்லாஹ் தனது திருமறையில் கேட்கிறான்.
நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?
அல்குர்ஆன் 56:68, 69
இது எக்காலத்துக்கும் பொருந்துகின்ற இறை சவாலாகும்.
மழை என்பது வல்லமை மிகு அல்லாஹ்வின் கையில் இருக்கும் தனி அதிகாரமும் ஆற்றலும் ஆகும். வானிலிருந்து மழை பெய்யவில்லை எனில் மண்ணில் உயிர் வாழ்க்கை இல்லை. இதையே திருக்குர்ஆன் கூறுகின்றது.
வானத்தில் உங்கள் உணவும், நீங்கள் வாக்களிக்கப்பட்டதும் உள்ளன.
அல்குர்ஆன் 51:22
இறைவன் தனது ரஹ்மத்தை நம் பூமி மீது பொழியச்செய்ய அனைவரும் துவா செய்யவும்.

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்