மத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..

Posted by Kodikkalpalayam on Monday, April 18, 2011 1


நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது எல்லா பள்ளிவாசல்களிலும் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகளில் எழுதப்பட்டிருக்கும் தடையுத்தரவு. இந்தத் தடை உத்தரவைப் படிப்பவர்களுக்கு, 'மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் ஒரு பாவி' என்ற தோற்றம் ஏற்படும். அதனால் தான் மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்களுக்கு அடி உதை விழுகின்றது. காவல்துறையில் புகார் பதிவாகின்றது. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படுகின்றன.


ஏன் இந்தத் தாக்குதல்கள்? மக்கள் ஏன் இந்த மத்ஹபுகளை வெறித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்? என்று சற்று கூர்ந்து கவனித்தாள் இந்த மத்ஹபுகளில் மண்டிக் கிடக்கின்ற ஆபாசங்களை, இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் விஷக் கருத்துக்களை பெண்களை வெட்கப்பட வைக்கும் ஆபாசங்களை தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆலிம்கள் மக்களிடம் சொல்லாமல் மறைப்பதால் தான் என்பது புரிகிறது.


மத்ஹபுகளை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் இன்று கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருக்கும் மக்கள் யார் என்று பட்டியல் போட்டால் இவர்களும் ஒருகாலத்தில் பள்ளிவாசல்களில், மத்ஹபு வெறியில் இருந்து கொண்டு தவ்ஹீதுவாதிகளைத் தாக்கியவர்கள் தான் என்பதை சொல்ல கடமை பட்டுள்ளோம்.


பிறகு இவர்கள் ஏன் வெளியில் வந்தார்கள் என்று தெரியுமா? மத்ஹபுச் சட்ட நூற்களில் எழுதப்பட்டுள்ள விஷக் கருத்துகளை, ஆபாசக் களஞ்சியங்களைப் படித்துப் பார்த்த பின்புதான் இந்த மக்கள் மத்ஹபுகளை விட்டு வெளியே வந்தார்கள். எனவே இதை அனைவரும் தெரிந்து கொண்டு, மத்ஹபு மாயையிலிருந்து இன்னும் வெளியேறாமல் இருக்கும் மக்களிடம் இதைப் பிரச்சாரம் செய்து, அவர்களையும் குர்ஆன், ஹதீஸ் என்ற சத்தியத்தின் பால் இழுக்க வேண்டும் என்பதற்காக இதை இங்கு பிரசுரம் செய்கிறோம்.


ஷாஃபி, அபூஹனீபா, மாலிக், அஹ்மது பின் ஹன்பல் ஆகிய நான்கு இமாம்களால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் தான் மத்ஹபுகள் என்று ஆலிம்கள் பிரச்சாரம் செய்தாலும், உண்மையில் அந்த நான்கு இமாம்களுக்கும் இந்த மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான்கு இமாம்களுமே குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும் என்று ஒருமித்துக் கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஆலிம்கள் இதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை.


சில நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்ட நூற்கள் தான் இன்று இமாம்களின் பெயரால் பின்பற்றப்படுகின்றன. இவர்கள் குறிப்பிடும் மத்ஹபுச் சட்ட நூற்களில் காணப்படும் குப்பைகளையும், அபத்தங்களையும், ஆபாசங்களையும் பார்ப்போம் அனைத்து ஆபாசங்களையும் இங்கு சொல்ல இடம் போதாது என்பதால் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறோம். கீழே உள்ளவைகளுக்கு குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகியவற்றில் ஆதாரம் உள்ளதா என்பதை சகோதரர் மௌலானா அவர்கள் விளக்க கடமை பட்டுள்ளார்? எனவே ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம் சகோதரர் மௌலானா அவர்களே



1.தொழுகையை முடிக்கும்போது ஸலாம் சொல்வதற்கு பதிலாக தொழுகையில் வேண்டுமென்றே குசு விடலாமாம்!


தொழுகை முழுமையான பிறகு (அதாவது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால்) தொழுகைக்கு வெளியில் செய்யக்கூடிய சொல், செயல் போன்றவற்றினால் தொழுகையை முடிப்பது கூடும். உதாரணமாக சப்தமிட்டு சிரித்தல், வேண்டுமென்றே பின் துவாரத்தின் வழியாகக் காற்றை விடுதல், பேசுதல்,நடத்தல், ஸலாம் கூறுதல் போன்ற காரியங்களால் தொழுகையை முடிப்பது கூடும். ரத்துல் முக்தார், பாகம்: 3, பக்கம்: 400


இறையச்சம் கடுகளகாவது இருந்தால் தொழுகையில் இப்படி செய்யலாமா மௌலானா? உங்களால் ஜும்மா மேடையில் பகிரங்கமாக இப்படி செய்வது கூடும் என்று சொல்ல முடியுமா மௌலானா?



2.மூத்திரத்தை முகத்தில் தடவினாள் மூக்கில் இரத்தம் நின்று விடுமாம்!


ஒருவனுக்கு மூக்கில் தொடர்ந்து இரத்தம் வடிந்தால் அல்ஹம்து சூராவை மூத்திரத்தால் அவனது நெற்றியில் எழுதலாம். ரத்துல் முக்தார், பாகம்: 2, பக்கம்: 117


மூத்திரத்துக்கு இவ்வளவு மகிமை இருப்பதாக மத்ஹபு நூற்கள் கூறுகின்றன. திருக்குர்ஆனை, அதன் தலைசிறந்த அத்தியாயமான பாத்திஹா சூராவை மூத்திரத்தால் எழுதலாம் என்று கூறி, குர்ஆனை இழிவுபடுத்துகின்றன. இது தான் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த சட்டங்களா மௌலானா? சிந்தித்து பதில் சொல்லுங்கள் மௌலானா.



3.இமாமுடைய தகுதிகள்!


அழகான முகமுள்ளவர், சிறந்த வம்சத்தைச் சார்ந்தவர், அழகிய மனைவி உள்ளவர், இவரே இமாமத் செய்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர். துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 259


இமாமத் செய்பவரின் மண்டை பெரிதாக இருக்க வேண்டும். இமாமுடைய 'உறுப்பு' சின்னதாக இருக்க வேண்டும். துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 601


மத்ஹபுச் சட்ட நூற்களில் கூறப்படும் தகுதிகள் இவை. பேஷ் இமாமுக்கு இவ்வளவு அசிங்கமான தகுதிகளை நிர்ணயம் செய்தது குர்ஆனா? ஹதீஸா? இஜ்மாவா, கியாஸா? சொல்லுங்கள் மௌலானா. இந்தத் தகுதிகளின் அடிப்படையில் தான் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் இமாமைத் தேர்வு செய்கிறீர்களா மௌலானா?



4.சதித் திட்டம்


குர்ஆன் முழுவதையும் படிப்பதை விட பிக்ஹ் நூலைப் படிப்பது மிகச் சிறந்தது. கன்சுத்தகாயிக், முன்னுரை


அல்லாஹ் நமக்கு அருளிய மாபெரும் பொக்கிஷமான குர்ஆன் பக்கம் மக்களை நெருங்க விடாமல் தடுப்பதற்காக நீங்கள் செய்த சதித் திட்டத்திற்கு, குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் உண்டா? மத்ஹபு ஆலிம்களே! பதில் சொல்லுங்கள்.



5.பகுத்தறிவுச் சட்டங்கள்!


பல் துலக்கும் குச்சியைச் சூப்பினால் கண்கள் குருடாகும். துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 124


மௌலானா இந்தப் பகுத்தறிவுச் சட்டம் குர்ஆனின் எந்த வசனத்திலிருந்து பெறப்பட்டது? எந்த ஹதீஸிலிருந்து வகுக்கப்பட்டது? தெளிவுபடுத்துவீர்களா மௌலானா?



6.தொழுகையில் விளையாட்டு!


A.) ஒரு மனிதனிடத்தில், 'நீ லுஹர் தொழுகையை நிறைவேற்றினால் உனக்கு ஒரு தீனார் உண்டு' என்று சொல்லப்பட்டு அவரும் அந்த எண்ணத்தில் தொழுதால் அவருக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்.ரத்துல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 447


B.) தொழுபவன் பறவை மீது கல்லெறிந்தால் அவனது தொழுகை வீணாகாது.துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677


C.) ஒருவன் பறவையை விரட்டினால் அல்லது ஏதோ ஒரு சப்தத்தினால் அழைத்தால் அவனுடைய தொழுகை வீணாகாது. துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 677


D.)சுப்ஹானல்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், இன்னும் அல்லாஹ்வை மட்டும் கண்ணியப்படுத்தும் வார்த்தைகளைக் கூறி தொழுகையை ஆரம்பிப்பது மக்ரூஹ‚டன் கூடும் துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 521


E.)கடமையான தொழுகையில் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் தொழுபவன் விரும்பினால் சூரத்துல் பாத்திஹாவை ஓதலாம். விரும்பினால் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லலாம். விரும்பினால் மவுனமாகஇருந்துவிடலாம். மப்சூத், பாகம்: 1, பக்கம்: 81


மௌலானா அவர்களே! மத்ஹபுக் கிதாபுகள் தொழுகையைக் கேலிக்கூத்தாக ஆக்கிக் காட்டுகின்றன. மேற்கூறிய விளையாட்டுக்களுக்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து இஜ்மாவு, கியாஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள். இறையச்சம் கடுகளகாவது இருந்தால் தொழுகையில் இப்படி விளையாடி இருப்பார்களா?



7.மோசடிகள்!


A.)இமாமோ, கலீபாவோ, அரசரோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு ஹத் தண்டனை கிடையாது. துர்ருல் ஹிகம், பாகம்: 5, பக்கம்: 310


B.)போதையூட்டக் கூடிய கடைசிக் கிண்ணம் தான் ஹராமாகும். ஒன்பது கிண்ணங்கள் மது அருந்தியவனுக்கு பத்தாவது கிண்ணம் புகட்டப்பட்டால் அவன் தண்டிக்கப்பட மாட்டான். ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 9


C.)திருமணம் செய்து கொள்ள முடியாத தாய், சகோதரி போன்றவர்களையோ, அடுத்தவனின் மனைவியையோ, இத்தா இருக்கும் பெண்ணையோ ஒருவன் மணமுடித்து, இது தவறில்லை என்று கருதி உடலுறவு கொண்டால் அவனுக்குத் தண்டனை இல்லை. ஆனால் கண்டிக்கப்படுவான். இது ஹராம் என்று கருதி அவன் செய்திருந்தாலும் இவ்வாறு தான். ரத்துல் முக்தார், பாகம்: 15, பக்கம்: 60


இந்த மோசடிகள், ஏமாற்றுக்கள் எல்லாம் மத்ஹபு சட்ட நூற்களில் தான் உள்ளன. இவற்றுக்குக் குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் காட்ட முடியுமா மௌலானா?



8.விசித்திரமான சட்டம்!


ஒரு பெண்ணின் கணவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாத நிலையில் 120 வருடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதாக முடிவு செய்து (பின்னர் அவளுக்குத் திருமணம் (?) செய்து வைக்க வேண்டும்) ஹிதாயா, பாகம்: 2, பக்கம்: 62


நடைமுறை சாத்தியமில்லாத, பெண்களுக்குத் துரோகம் இழைக்கின்ற இந்தச் சட்டத்துக்குக் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டுங்கள் மௌலானா.



9.மத்ஹபு இமாமின் காம சிந்தனை அசிங்கங்கள்!


ஒருவன் தன் பின்துவாரத்தில் தன் ஆண்குறியை நுழைத்தால் விந்து வெளியாகாத வரை குளிப்பு கடமையில்லை. துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 175


இந்த மானங்கெட்ட அசிங்கங்கள், குர்ஆன் ஹதீஸில் உள்ளவையா? அல்லது இஜ்மா, கியாஸில் உள்ளவையா? விளக்குங்கள் மௌலானா.


குறிப்பு: இதை விட ஆபாசமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. ஆனால் எங்கள் எழுதுகோல்கள் எழுதுவதற்கு வெட்கப்படுகின்றன.



10.தமிழில் தொழலாம்!


அரபி தெரிந்திருந்தாலும், தொழுகையில் அரபி அல்லாத மொழிகளில் ஓதுவது கூடும். ரத்துல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 488


பார்ஸி மற்றும் ஏனைய மொழிகளில் பாங்கு சொல்வது கூடும். ஹாஷியத்துல் ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 523


இந்த மாடர்ன் மஸ்அலாவுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் சம்பந்தம் உள்ளதா மௌலானா? தெளிவுபடுத்துங்கள்.



11.ஜும்ஆ!


இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் தான் ஜும்ஆ நடத்தப்பட வேண்டும் என்பது ஜும்ஆவின் விதிகளில் ஒன்றாகும். ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 83


மேற்கூறிய சட்டத்தின் அடிப்படையில் உலகில் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக இந்தியாவில் எவரது ஜும்ஆவும் நிறைவேறாமல் போகுமே! 'இனி இந்தியாவில் ஜும்ஆ கிடையாது'' என்று அறிவிக்கத் தயாரா மௌலானா? மத்ஹபு நூற்கள் அப்படித் தான் கூறுகின்றன.



12.மத்ஹபு மாறினால் தண்டனை!


நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் என்று போர்டு வைக்கின்றனர். ஆனால் ஹனபி மத்ஹபைத் தவிர மற்ற மத்ஹபுகள் தவறானவை என்றும் அவற்றைப் பின்பற்றுவது தண்டனைக்குரிய ஒன்று என்று ஹனபி மத்ஹபின் சட்ட நூற்கள் கூறுகின்றன.


ஒரு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவன், ஷாபியாக மாறி விட்டால் அவன் தண்டிக்கப்பட வேண்டும். ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 4, பக்கம்: 249


ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபில் சேர்ந்து விட்டால் அவருடைய சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது. ஹாஷியத்து ரத்தில் முக்தார், பாகம்: 1, பக்கம்: 565


நமது மத்ஹபு தான் சரியானது. மற்றவர்களின் மத்ஹபு தவறானது. துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 18


ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி ஷாபியாக இருப்பது பாவமான காரியம் என்றாகிறது. தவறான மத்ஹபில்(ஷாபியாக) இருப்பவர் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதிப்பது ஏன் மௌலானா?


இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? என்று ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் மௌலானா. இமாம்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு 200, 300 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நூல்களை ஆதாரமாக ஆக்கியது தான் என்பதை உணர்வீர்கள்.



முரண்பாடுகள்


இந்த மத்ஹபுச் சட்ட நூற்களில் பொய்களுக்கும் பஞ்சமில்லை. முரண்பாடுகளும் மலிந்து கிடக்கின்றன. மாதிரிக்குச் சில முரண்பாடுகளைப் பார்ப்போம்.


1.முஃதஸிலா பிரிவினரை திருமணம் முடித்துக் கொள்வது கூடும். ஏனென்றால் ஒரே கிப்லாவினரில் எவரையும் காஃபிர் என்று நாம் கூறமாட்டோம். துர்ருல்முக்தார், பாகம்: 3, பக்கம்: 50


2.முஃதஸிலா பிரிவினருக்கும் சுன்னத்து வல்ஜமாஅத்தினருக்கும் மத்தியில் திருமணம் செய்வது கூடாது. ஃபத்ஹ‚ல் கதீர், பாகம்: 6, பக்கம்: 397


3.இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சொல்லை நிராகரிப்பவன் மீது மணல் எண்ணிக்கைக்கு அல்லாஹ்வின் லஃனத் உண்டாகட்டும். துர்ருல் முக்தார் முன்னுரை


4.இமாம் அபூயூசுப், இமாம் முஹம்மது ஆகிய இருவரும் மூன்றில் இரண்டு பங்கு சட்டங்களுக்கும் அதிகமாக அபூஹனீபா இமாமுக்கு மாறு செய்துள்ளனர். ஜாமிஉஸ் ஸகீர், பாகம்: 1, பக்கம்: 8


5.ஹனபி மத்ஹபின் இமாம்களான அபூயூசுப், முஹம்மது ஆகிய இருவரின் மீது லஃனத் (அல்லாஹ்வின் சாபம்) உண்டாகட்டும் என்று கூறுகின்றனர்.


இப்படி முன்னுக்குப் பின் முரணான, ஆபாசமான, இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கின்ற சட்டங்களைத் தான் இமாம்களின் பெயரால் எழுதி வைத்துள்ளனர்.


மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்களை வாகாபிகள் என்று சொல்லும் நீங்கள் மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள மத்ஹபுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தயாரா?


மத்ஹபு வெறியை ஊட்டி, மக்களை வழி கெடுத்துக் கொண்டிருக்கும் ஆலிம்களே!


இமாம்களை மதிக்கிறோம் என்ற பெயரில் அவர்களை இழிவு படுத்தும் இந்தச் சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்ற கொள்கையின் பக்கம் வாருங்கள்.



'அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!அல்குர்ஆன் 3:32

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். அல்குர்ஆன் 33:36 ஹாசிகின்...BE.EEE

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

1 comment:

  1. இதனை புத்தக வடிவில் வெளியிட்டால் அணைத்து முஸ்லிம் சமுதாய மக்கள் அறிந்து திருந்துவதற்கு உதவியாக இருக்கும்

    ReplyDelete

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top