பொதுமக்கள் பங்கேற்காத தர்ஹா கொடியேற்ற ஊர்வலம் – கொடிக்கால்பாளையத்தில் தவ்ஹீத் எழுச்சி…

Posted by Kodikkalpalayam on Thursday, March 14, 2013 0

கொடிக்கால்பாளையம்:கொடிக்கால்பாளையம் என்றால் ஒரு காலத்தில் அக்கம் பக்கத்துக்கு ஊர் மக்களுக்கு தர்கா தான் நியாபகத்துக்கு வரும் ஏன் என்றால் கொடிக்கால்பாளையம் ஊர் முழுவதும் தெருக்கு தெரு  தர்காக்களுக்கு பஞ்சம் இல்லை 60அடி பாவா,ஹாஸ் பாவ,மகசும்சா வலியுல்லாஹ்  என்று ஒரு பக்கம் மகான்கள், மற்றொரு பக்கம்  பச்சை கிளி என்று விலங்கினத்தையும் விட்டு வைக்க வில்லை நம்ம ஊரு அறியாத  ஆலிம்கள் அறியாமை மக்கள்..........

இன்று அல்லாஹ்வின் பேரருளால் இந்த சத்திய மார்க்கத்தை விளங்கி அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் அவ்லியாக்கள் சுகதாக்கள் சாளிஹீன்கள் என்று யார் இருந்தாலும் அவர்களும் அல்லாஹ்வின் அடிமைகளே என்ற ஏகத்துவ முழக்க கொள்கையை கொடிக்கால்பாளையம் மக்கள் இடத்தில தவ்ஹீத் ஜமாஅத் பல  வருடங்களாக சொல்வது தாங்கள் அறிந்ததே ....(புகழ் அனைத்தும் இறைவனுக்கே)
                             

அன்றைய  நிலைமை: 
கடந்த 13-03-2013 அன்று நமதூரில் இருக்கும் ஒரு மகானுக்கு கொடி  வைபவம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அந்த கொடி  ஊர்வலத்தையும் ஊர் முழுவதும் சுற்றி வர ஓரு காலத்தில் இது போன்ற ஊர்வலத்திற்கு நமது ஊர் மக்களின் 
ஆதரவு  இருக்கும் ஊர்வலத்தில் சுமார் 50க்கு குறையாமல் மக்கள் கலந்து கொள்வார்கள்.

இன்றைய நிலைமை:
கூலிக்கு ஆள் வைத்து தர்கா ஊர்வலம் நடத்தும் நிலைமைக்கு ஆளாகி உள்ளது.. இந்த தர்கா கபுறு வணங்கி கூட்டம் அதில் கூட முஸ்லிம்கள் இல்லை அவர்களது உடையை பாருங்கள். முன்பு எல்லாம் குதிரை மேல் கொடியை வைத்து பிடிக்க பலர், மிகப்பெரிய கூட்டம், ஊர்வலம் முன்பு கையில் கொடியேந்தி சிறுவர் பட்டாளம் செல்ல அதனை தொடர்ந்து தப்ஸ் குழு (பேண்டு வாத்தியம்) முழங்க சினிமா பாடலின் மெட்டுகளில் இஸ்லாமிய(?) பாடல்கள் என்று வெகு விமர்சையாக நடைப்பெற்ற இந்த கொடி ஊர்வலம்…!

இன்று மக்களின் ஆதரவின்றி பார்க்கும் போதும், ஒரு காலத்தில் பல வலிமார்கள் அடங்கிய தர்கா உள்ள ஊர் என்றும் கூறுவார்கள். ஆனால் இன்று ஒரு சில தர்காக்களை தவிர மற்றவை எங்குயுள்ளது என்று தெரியாத நிலை. இவைகளின் மூலம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கொடிக்கால் பாளையத்தில் தவ்ஹீத்தின் (ஏகத்துவ) எழுச்சியும், வளர்ச்சியும் காணமுடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
                               
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இது போன்ற இஸ்லாமிய அடிப்படை கோட்பாட்டை தகர்க்கும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் ஷிர்க் என்னும் பெரும் பாவத்திற்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தின் விளைவு இன்று பெரும்பலான மக்களை தர்கா என்னும் அல்லாஹ்விற்கு இனை வைக்கும் வழிகேட்டிலிருந்து மக்களை மீள வைத்திருக்கு என்றால் அது மிகையாகது.
எல்லாம் புகழும் அகிலத்தை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top