கொடிக்கால்பாளையத்தில் இன்று மதியம் லேசான கோடை மழை!
Posted by Kodikkalpalayam
on Tuesday, April 23, 2013
0
திருவாரூர்:கொடிக்கால்பாளையம் பகுதியில் இன்று மதியம் 23-04-13 லேசான கோடை மழை!
கொடிக்கால்பாளையத்தில் இன்று மதியம் முதல் வானம் மேகமூட்டமாகவும் குளிர்ந்த காற்றுடன் சில நேரங்களில் லேசான தூரல் மழையும் . பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதமாக வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் கடைவீதி மற்றும் சாலைகளில் நடந்து செல்லவே அச்சப்பட்டனர்.
இந்த ஆண்டின் அக்னி நட்சத்திரம் துவங்குதற்கு முன்னதாகவே, வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில், 45 டிகிரியில் இருந்து, 48 டிகிரி வரை, வெயில் தாக்கம் இருந்தது. அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. பெரம்பலுரில் கடந்த, 15ம் தேதி, 52 டிகிரி, 16ம் தேதி, 50 டிகிரி, 17ம் தேதி, 49 டிகிரி, 18ம் தேதி, 51 டிகிரியாக வெயில் அளவு இருந்தது. நேற்று, 45 டிகிரி வெப்பம் நிலவியது.
வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உஷ்ணத்தை தாக்கு பிடிக்க முடியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உஷ்ணத்தை தாக்கு பிடிக்க முடியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த லேசான கோடைமழை மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
Tagged as: கொடிக்கால்பாளையம், பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்