நோன்பு வைக்க தடைபோட்ட பாத்திமா பள்ளிக்கூடம் தட்டிகேட்டு பாடம் நடத்திய தவ்ஹீத் ஜமாத்
Posted by Kodikkalpalayam
on Monday, July 15, 2013
0
ஏக இறைவனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அழைக்கும்...
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் ராமேக்க ரோடு பகுதியில் உள்ள (ஆங்கிலவழி)R.C பாத்திமா மேல்நிலை பள்ளியை அனைவரும் அறிந்திருப்போம் நமதூர் மாணவ மாணவிகள் அதிகமாக படித்து வருகின்றனர் கடந்த வெள்ளிகிழமை 12-07-2013 அன்று பள்ளி தலைமைஆசிரியை அவர்கள் பள்ளியில் படிக்கும் 1-முதல் அணைத்து வகுப்பில் படிக்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளை (வெள்ளி) அன்று காலை அனைவரையும் ஓர் இடத்துக்கு அழைத்து நோன்பு குறித்து பாடம் எடுத்துள்ளார்
*நோன்பு என்பது உங்களுக்கு முக்கியம் இல்லை!
*உங்கள் கடவுள் உங்களை இப்படிதான் வருத்திக்கசொல்கிறாரா?
*இனி யாரும் பள்ளிக்கு நோன்பு நோற்று வரக்கூடாது?
இன்னும் மாணவ மாணவிகளுக்கு உருட்டலும் செய்துள்ளார்தலைமை ஆசிரியை
+copy.jpg)
விழிபிதிங்கிய நிலையில் பெற்றோர்கள்
தலைமை ஆசிரியர் சொல்வதை கேட்டு அரண்டுபொய் வெள்ளிகிழமை வீட்டுக்கு திரும்பிய மாணவ மாணவிகள் பெற்றோர்களிடத்தில் இதை சொன்னனர் விழிபிதிங்கிய நிலையில் பெற்றோர்கள் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிளிடம் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர்.நிர்வாகிகள் (சனி-ஞாயிறு) இருதினங்கள் விடுமுறை என்பதால் பெற்றோர்களை சமாதன படுத்தி திங்கள்கிழமை நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுக்கப்பட்டது

இன்று திங்கள்கிழமை(15-07-2013) காலை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையோடு பள்ளிநிர்வாகத்தை சந்திக்க கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் பள்ளிக்கு விரைந்தனர்
பாடம் நடத்திய தவ்ஹீத் ஜமாஅத்
பாத்திமா பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்தோம் அவர்களுடம் 20 நிமிட உரையாடல் நடைபெற்றது ஆசிரியை அவர்களுக்கு நோன்பு குறித்த விளக்கத்தையும்,இஸ்லாமிய அடிப்படை கல்விவியும் அல்லாஹ்வின் உதவியால் பாடம் எடுக்கபட்டது.
அதிர்ச்சி அடைந்த சிஸ்டர் (தலைமை ஆசிரியர்)
அத்துடன் சேர்த்து பைபிள் குறித்தும் விளக்கப்பட்டது மத்தேயு 6:16 மார்க் 9:2 ஆகிய வசனங்களில் பைபிளிலும் நோன்பு குறித்த சட்டங்கள் உள்ளது என்பதை எடுத்துரைத்தனர் பொறுமையுடன் கேட்ட தலைமை ஆசிரியை இனி இதுபோன்ற செயலை செய்யமாட்டோம் என வாக்குறுதி கொடுத்தார் அத்துடன் உங்கள் மார்க்கத்தை அறிய ஆவலுன் இருகிறேன் எனவம் குறிபிட்டார் உடனே திர்க்குறான் தமிழாக்கம் மாவட்ட நிர்வாகிகள் மூலம் வழங்க பட்டது அல்ஹம்துலில்லாஹ்
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.
திருக்குரான் 16:125
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்