TNTJ-நடத்திய ஹஜ் பெருநாள் விளையாட்டு போட்டி-2014 (புகைப்பட தொகுப்பு)
Posted by Kodikkalpalayam
on Tuesday, October 14, 2014
0
0
ஏக இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் அருளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று வீர விளையாட்டுகளை மக்களுக்கு நடத்தி காட்டியதை பல ஹதீஸ் வழியாக வழிகாட்டுதலை அறிந்துள்ளோம்
அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் கொடிக்கால்பாளையம் மாணவரணி சார்பாக ஹஜ்பெருநாள் (தியாக திருநாள்)
மூன்றாம் ஆண்டு விளையாட்டு போட்டி நபிவழி அடிப்படையில் மார்க்கத்துக்கு
முரணில்லாமல் நமதூர் தெற்கு தெருவில் நடைபெற்றது இதில் 100க்கும் மேற்பட்ட
மாணவர்கள் கலந்து கொண்டனர்...
விளையாட்டு
போட்டி ஆரம்பம் முதல் முடியும் வரை நமதூர் மாணவர்கள் ஆர்வமாக இருந்தார்கள்
தவ்ஹீத் ஜமாத்திடமிரிந்து விளையாட்டு போட்டி அறிவிப்பு வந்தவுடன் நமதூர்
மாணவர்கள் அனைவரும் தனியார் கடையில் தங்களுடைய பெயரை முன்பதிவு செய்தனர்...
அல்லாஹ்வின் அருளால போட்டி மாலை சரியாக 2.30மணிக்கு துவங்கியது போட்டியை கிளைத்தலைவர் S.M களிபதுல்லாஹ் துவக்கிவைத்தார்.
போட்டி விபரம்: 01 மிதி சைக்கிள் (சிறுவர்) 02 ஓட்ட பந்தயம் (சிறுவர்-சிறுமியர்) 03 எலுமிச்சை கரண்டி(சிறுமியர்)04 ஊசி நூல் கோர்த்தல்(சிறுமியர்) 05 நாற்காலி விளையாட்டு(சிறுமியர்)
ஏன போட்டிகள் மிக சிறப்பாக வீரியமாக நடைபெற்றன..
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் இறுதியில் கிளை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர் போட்டி நிகழ்ச்சி அனைத்தையும் நமதூர் கிளை (மாணவரணி தொண்டரணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்...Ad Option
ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ!' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி(950, 2907)
பெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுக்களை ஊர் தோறும் ஏற்பாடு செய்வதன் மூலமும் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்